இதற்குக் காரணம், ஆறுகளும், பாசன வாய்க்கால்களும், வடிகால் வாய்க்கால்களும் முறையாக தூர்வாரப்படாதது என அவர் குறிப்பிட்டார். வளவனாறு, மரக்கான் கோரையாறு, புது பாண்டியாறு போன்ற ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் மிகுந்து வளர்ந்து தண்ணீர் ஓட்டத்தை தடுத்துவிட்டதாகவும் கூறினார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சென்று பார்க்கவும், ஆய்வு செய்து உடனடி நிவாரணம் வழங்கவும் அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “அரசு போர்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு விவசாயிகளையும் அவர்களின் சாகுபடிகளையும் காப்பாற்ற வேண்டும்” என அவர் கோரினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்பு வந்துச் சந்தித்ததைத் தொடர்ந்து நெல் கொள்முதல் நடைபெற்றது. ஆனால் தற்போதைய வெள்ள பாதிப்பில், அமைச்சர் மற்றும் ஆட்சி சார்பில் எவரும் வரவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இந்த ஆய்வில் ஒன்றிய செயலாளர்கள் நடராஜன், அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment